Monday, August 12, 2013

அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே!!!

அழகு நிலா காயும்
ஆகாயத்தின் மேலே
அமைதியான நேரம்
ஊர் உறங்கும் வேளை
சிலு சிலுனு காத்து
தாலாட்டுற வேளை
சிரிக்குது என்ன பார்த்து
தங்க மணி மால
கண்ணான கண்ணுமணி
கண்ணு உறங்கு
பொன்னான காலம்
ஒண்ணு காத்து கிடக்கு

அழகு நிலா காயும்
ஆகாயத்தின் மேலே

அழகு நிலா காயும்

இராப்போது எப்பவும் இல்ல
அதுக்கும் உள்ளது எல்லை
வேளை வந்த விடிஞ்சாகாணும்
பகல்
வேளை வந்த விடிஞ்சாகாணும்

காயாத வெள்ளமும் இல்ல
அதுக்கும் உள்ளது எல்லை
கோடை வந்த வடிஞ்சாகணும்
இங்கு
கோடை வந்த வடிஞ்சாகணும்

எந்நாளும் எதிர் நீச்சல்
நீ போடணும்
எதிர்காலம் நமக்கென்று
நீ பாடணும்

பொன்மானே கொல்லிமலை
பூந்தேனே
உன் கண்ணீர் எல்லாம்
பன்னீர் ஆகுமே

அழகு நிலா காயும்
ஆகாயத்தின் மேலே
அமைதியான நேரம்
ஊர் உறங்கும் வேளை
சிரிக்குது என்ன பார்த்து
தங்க மணி மால

வேர் வாழ ஊத்தணும் நீரு
மரத்தை வச்சவன் யாரு
வாடாமலே அவன் பார்த்துப்பான்
வேர்
வாடாமலேஅவன் பார்த்துப்பான்

யாராலே மண்ணுல வந்தோம்
பொறந்து கண்ணு தொறந்தோம்
பாரம் எல்லாம் அவன் ஏத்துப்பான்
நம்ம
பாரம் எல்லாம் அவன் ஏத்துப்பான்

அவன் சொல்லி யாராச்சும் வரக் கூடுமே
நாம் வேண்டும் நிழல் இங்கு
தரக் கூடுமே

எனை போலே நம்பி இங்கு
இனிமேலே
உன் துன்பம் எல்லாம் தூளாய் போகுமே

அழகு நிலா காயும்
ஆகாயத்தின் மேலே
அமைதியான நேரம்
ஊர் உறங்கும் வேளை
சிலு சிலுனு காத்து
தாலாட்டுற வேளை
சிரிக்குது என்ன பார்த்து
தங்க மணி மால
கண்ணான கண்ணுமணி
கண்ணு உறங்கு
பொன்னான காலம்
ஒண்ணு காத்து கிடக்கு

அழகு நிலா காயும்
ஆகாயத்தின் மேலே

அழகு நிலா காயும்

No comments:

Post a Comment